Saturday, April 2, 2022

கேள்வி கவிதை

எண்ணில் அடங்கா
எண்ண அலைகளை
தன்னுள் தொலையாமல்
தட்டு மெட்டோடு
தவிப்பு தீர-  திணறாமல் 
தன்மையாய் தருவது தான் கவியா?
இல்லை
வளைந்து நெளிந்த 
வழியில் சென்று
மூடுபனி போர்வைக்குள்
மறைந்த வெள்ளை தாள்
விடையை தேடி
தேடிய விடைக்கு வினவும் தேடி 
வியப்பில் ஆழ்ந்து 
வார்த்தை இன்றி நிற்பது கவியா?